Tamil calendar 3.8.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#ஆடிப்பெருக்கு இன்று
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

3.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 3.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
18ந் தேதி புதன் கிழமை . அதிகாலை 5.42  வரை சஷ்டி திதி. பிறகு வ. சப்தமி திதி.மாலை 6.10  வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:
12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  பகல் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

பெரிய நகரங்களில் இட மதிப்பு என்பது இன்றைய நிலவரப்படி மிக அதிகமாக இருக்கிறது. லட்சம் என்று சொல்லாமல் கோடிக்கணக்கில் மாறிவிட்டது . இந்த இடத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளங்கள் தோண்டி  கட்டிடங்கள் கட்டுவதும் உண்டு. அப்படி கட்டலாமா? என்கிற ஒரு கேள்வி வரும் பொழுது இந்த இடத்தில் கட்டக்கூடாது என்று சொன்னாலும், ஒரு சில இடங்களில் ஏற்கனவே கட்டி வைத்திருக்கிற இடங்களில் என்ன செய்வது என்று முடிவு செய்யும் போது ஒரு சில இடங்களில் விட்டுவிடலாம் என்று சொல்வேன்.

எப்படி என்று சொன்னால் உங்க இடத்தில் தென்மேற்கு பகுதியை பள்ளம் பரிக்காது மேடாக உயரமாக விட்டுவிட வேண்டும். இது ஒரு வகை. அல்லது சாலைக்கு கிழக்கிலும், சாலைக்கு வடக்கிலும் பள்ளங்களை எடுத்துக்கொள்ளலாம் என்பது  இரண்டாவது விதி . மூன்றாவது விதி நீங்கள் இருக்கிற மனைக்கு வடக்கிலும், கிழக்கிலும் பள்ளம நோண்டி கட்டிடங்கள் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னால், அதுவும் ஓரளவுக்கு துணை செய்கிற மனையாக இந்த மூன்று விதிகளை தவிர, பள்ளம் பறித்து கட்டிடம் கட்டுவது என்பது வாஸ்து ரீதியாக தவறு.

கிழக்கு சாலை இருக்கிறது. வடக்கு சாலை இருக்கிறது. மேற்கு, தெற்கு புறத்தில் பள்ளங்களை பறித்து கட்டிடம் கட்டுவது தவறு. தரைத் தளத்தை ஒரு ஆனால் கிழக்கு வடக்கு சாலையில் இருக்கும் இடத்தில் பள்ளம் வேண்டும் என்று  விடுவது தவறு. அதாவது அப்படி செய்தால் மேற்கு அதாவது கிழக்கிலும் வடக்கிலும் உங்களுடைய கட்டிடத்திற்கு உயர அமைப்பில் வந்துவிடும். ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத இடங்களில் வேண்டும் என்று சொன்னால் தென்மேற்கு மூலை பகுதியை மட்டும் உயர செய்து கொள்ளலாம். இரண்டாவது விஷயமாக தெற்குப் பகுதியை முழுவதும் உயர படுத்திக்கொள்ளலாம். அப்பார்ட்மென்ட் வீடுகளில் இன்றைக்கு பார்க்கிங் கட்டிடம் என்பது இருக்கிறது. முழுக்க முழுக்க அந்த கட்டிடத்திற்கான பார்க்கிங் பகுதியாக விட்டு  இருக்கின்றார்கள். அந்த இடத்தில் நீங்கள் அது சார்ந்த ஒரு கட்டிடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது முழுக்க முழுக்க தரை தளத்தில் இணைந்து இருக்கும் மேல் தளத்தைதவிர்க்க வேண்டும்.அதாவது  தரை தளத்தில் இருக்கும் வீட்டினை தவிர்க்க வேண்டும். அதற்க்கு மேல் மாடியை மட்டுமே தரவேண்டும். அந்த தளம் இந்த இடத்தில் முதல் மாடி ஆக மாறியிருக்கும். அந்த தளத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டு மற்ற அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த விஷயத்தில் வாஸ்து விதிகளுக்கு பொருந்துகிற, இரண்டாவது மாடியிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனைத் தவிர பள்ளம் பறித்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளை தவிர்த்துவிட வேண்டும் என்பது எனது வாஸ்து சார்ந்த அறிவு ஆகும். அதாவது அனுபவ பதிவும் கூட.
  
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிசபம்- பக்தி
மிதுனம்- வெற்றி
கடகம்- சுகம்
சிம்மம்- பயம்
கன்னி- சிரமம்
துலாம் – பாராட்டு
விருச்சிகம்- குழப்பம்
தனசு – திறமை
மகரம்-  அமைதி
கும்பம்- விவேகம்
மீனம் –  அன்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_03

வெனிசுலா கொடி நாள்

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)

தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)

அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading