Calendar vastu chennai tamilnadu today 4.8.2022 டிகிரி சுத்தம் வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

4.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 4.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
19ந் தேதி வியாழக்கிழமை  . அதிகாலை 5.08  வரை சப்தமி திதி. பிறகு வ. அஸ்டமி திதி.மாலை 6.34  வரை சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:
1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு மனை வாங்க முடிவு செய்கிறார்கள். அப்படி மனை வாங்க முடிவு செய்கின்ற பொழுது, அந்த இடத்தில் கிழக்கு அல்லது, வடக்கு அல்லது, மேற்கு இருக்கிறது அல்லது, தெற்கு பார்த்து இருக்கிறது என்று இவர்களாக முடிவு செய்து ஒரு மனையை வாங்கும் பொழுது, ஒரு சில இடங்களில் திசைக்கு பொருந்தாத மனைகளாக அமைந்துவிடும். வடக்கு என்று நினைத்திருப்போம் அது வடக்கு 360 டிகிரி காட்டாது 330 திசைக்காட்டி இருக்கும். அல்லது 30 டிகிரி காட்டி கொண்டு இருக்கும்.ஆனால் அந்த இடத்தில் வடக்கு அல்லது, கிழக்கு என்று நினைத்திருப்போம்.அதேபோல் கிழக்கு என்பது 90 டிகிரி காட்டாது 75 டிகிரி திசைகாட்டி அமைந்து கொண்டிருக்கும்.அல்லது 120 டிகிரி களை காட்டிக் கொண்டிருக்கும்.

இதுபோல இருக்கின்ற இடங்களில் சாலைகள் வடக்கும், கிழக்கும் வடகிழக்காக வரும்பொழுது , வடகிழக்கு என்று நினைத்து வாங்கி விடுவோம்  ஆனால் அந்த இடத்தின் தென்கிழக்கு அல்லது , வடமேற்கு சாலைக்கு செல்கிற அமைப்பாக, சாலையில் இருக்கிற அமைப்பாக மாறி, ஒரு சில இடங்களில் அந்த இடங்களில் கட்டுகிற கட்டிடங்களுக்கு தோசத்தை கொடுத்துவிடும் . ஆக வாஸ்து ரீதியாக மிகச் சிறப்பு வாய்ந்த மனையை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், உங்கள் அருகில் இருக்கிற வாஸ்து ஆலோசகரை  தொடர்பு கொள்ள வேண்டும்.அல்லது அவரை நேரில் அழைத்துச் செல்ல வேண்டும். அது முடியவில்லை என்று நீங்கள் முடிவு செய்தால், உங்கள் செல்போனில் ஒரு திசைகாட்டி  அப்ளிகேஷனை தரவு செய்து வைத்து, அந்த திசைகாட்டி சார்ந்த விஷயத்தை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சம்பந்தப்பட்ட வாஸ்து நிபூணருக்கு வாட்ஸ்அப் தொலைபேசி வழியாக அனுப்பி அவரிடம்  கலந்துரையாடல் செய்து பிறகு அந்த இடத்தை வாங்க முடிவு செய்ய வேண்டும்.

அதை நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம் ஒரு இரண்டாவது ஒரு பரிசோதனை என்று சொல்லக்கூடிய ஒரு மனிதரை அணுகி வாங்க முடிவு செய்வது சாலச் சிறந்தது. அப்படி சந்திக்கும் நபர் வாஸ்து நிபுணராக இருப்பது நல்லது. ஏனென்று சொன்னால் அதை உங்களுடைய கட்டிட அறிவு சார்ந்த ஒரு மேஸ்திரி, அல்லது இன்ஜினியர் போன்ற மனிதர்களின்  அறிவுரைகளை கேட்பதைவிட வாஸ்து மனிதரை மட்டுமே பார்ப்பது நல்ல முறை.அப்படிப்பட்ட மனிதரிடம் நீங்கள் கேட்கும் பொழுது நல்ல மனையாக தேர்ந்தெடுத்து கொடுப்பதற்கு மிகமிக வாய்ப்புக்கள் அதிகம். ஆக இந்த தவறுகளை ஒரு வீடு மற்றும் மனை மற்றும் கட்டிடம் சார்ந்த புதிய முயற்சிகள் செய்யும் போது சிறிய அளவிலாவது செய்ய வேண்டாம். அதாவது திருமணம் என்பதும் , ஒரு வீடு கட்டுவது என்பது வாழ்வில் ஒருமுறை செய்வதுதான். அதை சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லுவேன்.
  
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  நிறைவு
ரிசபம்-  ஆர்வம்
மிதுனம்- பரிசு
கடகம்- முயற்சி
சிம்மம்- பரிவு
கன்னி- ஓய்வு
துலாம் – வெற்றி
விருச்சிகம்- சிந்தனை
தனசு – செலவு
மகரம்- நற்செய்தி
கும்பம்- அமைதி
மீனம் – வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_03

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)

சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)

அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)

நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading