Chennai Vaeru calendar 4.12.2022

Vastu calendar chennai

தினசரி நாள்காட்டி 4.12.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.18ந் தேதி . ஞாயிறு.  நாள் முழுவதும் வ.த்வாதசி  நாள் முழுவதும் அசுவினி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today

தலைவாசல் எந்த திசையை பார்த்திருக்க வேண்டும். எனது ராசிக்கு என்னுடைய ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் எனது ஜாதகத்துக்கு தகுந்தாற்போல எனக்கு தலைவாசல் எங்கே என்று கேட்கிற மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். இந்த இடத்தில் ராசிக்கு வாசல் என்பது முழுக்க முழுக்க வாஸ்துவில் இருக்கக்கூடிய விஷயம் கிடையாது. இது அந்த காலத்தில் வீடு கட்டும் பொழுது ஜோதிடர்களிடம் கேட்காமல் கட்ட மாட்டார்கள். ஆகவே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் என்னை கேட்காமல் கட்டக்கூடாது என்கிற ஒரு விஷயத்தை உட்பகுத்தி வைத்த விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. அதாவது அந்த காலத்து மார்க்கெட்டிங் என்று கூட எடுத்து கொள்ளலாம். இந்த காலஜோதிடர்கள் சமூக வலைதளங்களை அதாவது youtube facebook google போன்ற விஷயங்களில் நாங்கள் இருக்கிறோமோ அதுபோல, அந்த காலத்து மார்க்கெட்டிங் என்பது எனது கருத்து. ராசியை பொறுத்து வைத்துக் கொள்வது என்பது என்னைப்பொறத்த அளவில் இதற்கும் வாஸ்துவுக்கும் முழுக்க முழுக்க சம்பந்தம் கிடையாது . முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்.

வீடு கட்டும் பொழுது ஜோதிடரை சந்தித்துக் கொள்ளுங்கள் தவறு கிடையாது. தற்போது வீடு கட்டுவதற்கு யோகம் இருக்கிறதா? இல்லையா?. என்று மட்டும் கேட்கலாம். ஆனால் எனக்கு வாசல் எந்த வாசல் எப்படி நான் அமைக்க வேண்டும் என்று ஒரு ஜோதிடரை வாஸ்து சார்ந்த கேள்வியை கேட்பது மிக மிக முட்டாள்தனத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்லுவேன்.ஜோதிடம் பார்க்கும் மனிதன் வாஸ்து தெரிந்து இருந்தால் அந்த இடத்தை சென்று பார்த்து பிறகு திசைகாட்டி சொன்னால் சரி .இல்லை என்றால் தவறு.

ஜோதிடருக்கு வாஸ்து தெரிந்திருக்கும் அல்லது தெரியாமல் இருக்கும். ஆனால் ஜோதிடம் என்பது முழுதாக தெரிந்திருக்கும் என்னை கூட எடுத்துக் கொள்ளுங்கள். வாஸ்துவில் 100% நான் சரியாக இருப்பேன். அதே சமயம் ஜோதிடத்தில் 100% சரியாக சொல்லுவேனா என்று சொன்னால் இல்லை என்று தான் சொல்வேன். இந்த ஜோதிடத்தை நான் எங்கு வைத்துக்கொள்வேன் என்று சொன்னால் நான் சந்திக்கிற மனிதர்களுக்கு வாஸ்துவை சீர்திருத்தங்கள் செய்ய பணம் இருக்காது. ஆக மாற்றம் என்பது சொல்வதற்கு பதிலாக அவர்களை அடுத்த கட்டம் நகர்த்தும் விதமாக எதுவும் செய்ய வேண்டாம். உங்களுடைய நேரம், காலத்திற்கு தந்தார் போல வீடு மாறிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விடுவேன். அவர்களின் கட்டிடத்தை உடைத்து நொறுக்கி வாஸ்து சீர்திருத்தம் செய்து பல லட்சங்கள் செலவு செய்து மேலும் கடனாக நிலையாக நிகழ்வை செய்ய மாட்டேன். இதற்காகத்தான் நான் ஜோதிடத்தை பயன்படுத்துவேனே தவிர வேறு எந்த நிகழ்வுக்காகவும் பயன்படுத்த மாட்டேன். அதுபோலத்தான் ஜோதிடர்களும் வாஸ்துவை ராசியில் வாசல் வைத்து வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்வது அவர்களுடைய வாழ்க்கை சிதைப்பதற்கு சமம். வாஸ்துவை முழுதாக தெரிந்தால் ஜோதிடர்களே சொல்லுங்கள். இல்லை என்றால் தயவு செய்து விட்டு விடுங்கள். அதேசமயம் மேஷம் சிம்மம் தனுசு மூன்றிற்கும் கிழக்கு வாசல். ரிஷபம் கன்னி கும்பம் இந்ந மூன்று ராசிகளும்  தெற்கு வாசல்.  மிதுனம் துலாம் கும்பம் இதற்கு மூன்றும் மேற்கு வாசல். கடகம் விருச்சிகம் மீனம் இந்த மூன்று ராசிகளுக்கும் வடக்கு வாசல் முடிந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த விஷயம் எனக்கு தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இவர் ராசி என்கிற விஷயத்தை தெரியாமல் சொல்கிறார் ஆகவே இவர் சொல்வதை எடுத்துக் கொள்ள வேண்டும்.என்கிற அவசியம் இல்லை என்று நினைக்க வேண்டாம். நான் சொல்வது உண்மையான விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். வேற எந்த காரணமும் இதில் கிடையாது

Loading