ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
3.9.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 3.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
18ந் தேதி சனிக்கிழமை மதியம் 12.30 வரை வ. சப்தமிதிதி . பிறகு வ.அஸ்டமி திதி இரவு 10.45 வரை அனுசம் நட்சத்திரம். பிறகு கேட்டை நட்சத்திரம் .
ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்
வாஸ்துவில் திண்ணைகள் அமைப்பது பற்றி தெரிந்து கொள்வோம். நிறைய இடங்களில் பழங்கால அமைப்பில் திண்ணைகளை அமைக்கலாம் என்று முடிவு செய்கிற மக்கள் இருக்கிறார்கள் . எதற்கு என்று சொன்னால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வீட்டிற்கு வெளியே வந்து அமரும்பொழுது திண்ணைகளில் அமரலாம் என்பதற்கு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரம் திண்ணைகளை அமைக்க கூடாது என்று சொல்கிறது. இது பொதுவான கருத்து. அதற்காக ஒரு பிளாஸ்டிக் சேர் அல்லது மரப் பெஞ்ச் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று என்னைப் போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் சொல்கின்றோம். இருந்தாலும் திணைகள் அமைக்க வேண்டும் என்று ஒரு சில மக்கள் பிடிவாதமாக இருப்பார்கள் . அப்படி அமைக்கின்ற பொழுது வீட்டின் தெற்கு வாயில் அல்லது மேற்கு வாயில்களில் தாராளமாக திண்ணைகளை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கும் பொழுது மேற்குப்புறத்திலும், தெற்கு புறத்திலும் எவ்வளவு இடங்களை விடுகிறோமோ, அதற்கு தகுந்தார் போல கிழக்கு புறத்திலும், வடக்கு புறத்திலும் இடம் விட்டு அமைக்க வேண்டும்.
தெற்கு மேற்கு புறங்களில் திண்ணைகளை அமைக்கும் பொழுது காலியிடம் சார்ந்த விசயத்தில் கடைபிடிக்க வேண்டும். அதே சமயம் கிழக்கு புறத்தில் , வடக்கு புறத்தில் திண்ணைகளை அமைக்க கூடாது என்று சொல்கின்றோம் . ஆனால் அமைக்க வேண்டும் என்று நினைக்கிற, பிடிவாதமாக இருக்கிற மக்களுக்கு எனது ஆலோசனை என்பது, வீட்டில் தரைத்தல உயரம் எவ்வளவு இருக்கிறதோ? அதைவிட தாழ்த்தி தாராளமாக திண்ணைகளை அமைத்துக் கொள்ளலாம். ஒருவேளை தரைத்தளம் வீட்டின் தரைதளத்தை விட உயரமாக அமைக்கும் பொழுது, வாஸ்து குற்றமாக முடிந்துவிடும். அப்படி அமைக்கின்ற பொழுது ஏறக்குறைய திண்ணைகளின் உயரத்திற்கு தகுந்தார் போல வீட்டில் உட்புற தரை தளத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். அப்படி உயர்த்திக் கொள்கின்ற பொழுது, வாசல்படியில் ஒரு சில மக்கள். லாபம் நஷ்டம் என்று கணக்கு போடுவார்கள். அந்த இடத்தில் படிகளை லாப நஷ்ட கணக்குகளை பார்க்காது, அந்த திண்ணைகளுக்கு ஒரு படி அமைப்பையும் வீட்டுக்கு உட்புறத்தில் ஒரு படி அமைப்பின் அமைத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த பகுதிகளில் அமைக்கும் பொழுது, திண்ணைகளின் உயரம் என்பது மிக மிக முக்கியம். அந்த திண்ணை வீட்டின் உயரத்தை விட, மிகாமல் இருப்பது நலம். அப்படி அமைக்கும் பொழுது, அந்த திண்ணைகளால் வாஸ்து குற்றங்கள் கிடையாது. தாராளமாக திண்ணைகளை அமைத்துக் கொள்ளலாம்.
—————————
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – அமைதி
ரிஷபம்- பணிவு
மிதுனம்- இன் சொல்
கடகம்- பரிசு
சிம்மம்- மறதி
கன்னி- பிரயாசை
துலாம் – விருத்தி
விருச்சிகம்- தேர்ச்சி
தனசு – வரவு
மகரம்- ஏமாற்றம்
கும்பம்- பெருமை
மீனம் – ஆக்கம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#September_3
ஆஸ்திரேலிய கொடி நாள்
கத்தார் விடுதலை தினம்(1971)
சீனா ராணுவ படை தினம்
உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)
_______________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
384 total views, 1 views today