ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
![](https://chennaivastu.com/wp-content/uploads/2022/06/InCollage_20220608_171253038-scaled.jpg)
9.6.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 9.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
26ந் தேதி வியாழக்கிழமை . காலை 8.23 வரை வ.நவமி திதி. பிறகு வ.தசமி திதி. விடியற்காலை 4.13 வரை அஸ்தம் நட்சத்திரம் பிறகு சித்திரை நட்சத்திரம்.
ராகுநேரம்:1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
ஒரு இல்லத்தில் வடகிழக்கு மிகச் சரியான முறையில் இருந்தால் தான் ஒரு குடும்பத்தில் வளர்ச்சி என்பது இருக்கும். அந்த வகையில் ஒரு வாரிசை உருவாக்க வேண்டும், அடுத்த தலைமுறையை கொடுக்கும் நிலை, வெளியிலிருந்து ஒரு பொருள் வருகின்ற நிலை, குடும்பத்தின் உயர்வை உற்பத்தி செய்யும் இடமாக வடகிழக்கு இருக்கிறது. ஒருவரை நம்பி ஒரு தொழிலை ஒப்படைக்கும் பொழுது, அதன் வழியாக ஒருவருக்கு நன்மை கிடைக்குமா? தீமை கிடைக்குமா? என்கிற விஷயமும் வடகிழக்கு தான் வைத்திருக்கிறது. இதனைத்தான் நாம் சரணாகதி என்று சொல்லுவோம் . அதே சமயம் உடலில் இருக்கக்கூடிய தலை சார்ந்த பகுதிக்கு வாஸ்துவின் ரீதியாக வடகிழக்கு தான் அங்கம் வகிக்கிறது . அந்த வகையில் தலை, கண், காது, மூக்கு, வாய் சம்பந்தப்பட்ட உறுப்புக்களில் உடல்நல கோளாறுகள் ஏற்படும் பொழுது வடகிழக்கை உன்னிப்பாக கவனித்து சரி செய்வது நலம். அதேபோல மூக்கு மற்றும் மலத்துவாரம் ஒரு தொடர்புண்டு. தோல் மருத்துவரிடம் சென்றால் மலத்துவாரத்தில் பிரச்சனை என்றால் மூக்கில் மருந்து வைக்கிற பழக்கம் இருக்கிறது. அதுபோல தலைக்கும் தலை சார்ந்த மூக்கிற்கும் மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அந்த வகையில் மலத்துவாரம், பிறப்புறுப்பு சார்ந்த பாதிப்பு ஏற்படும்போது தென்மேற்கு இணைந்து வடகிழக்கு சார்ந்த குற்றங்கள் இருக்கும் பொழுது தான் பாதிப்புகளை கொடுக்கும். அதேபோல ஒருவர் மனநிலை பாதிப்பு, கிறுக்குத்தனமாக இருப்பது, போதைப்பொருளுக்கு அடிமையாவது , ஏதாவது ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது, போன்ற விஷயங்களும் வடகிழக்கு தான் வைத்திருக்கிறது. அந்த வகையில் வடகிழக்கு வாஸ்து ரீதியாக தவறுகள் ஏற்படும் பொழுது மேற்கூறிய பலன்கள் ஒருவரின் நடவடிக்கை சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பைக் கொடுக்கும். ஆகவே வடகிழக்கு பகுதியை என்னை பொருத்த அளவில் போர்க்கால அடிப்படையில் வாஸ்து குற்றங்களை சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையுங்கள் .
_______________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேஷம்-போட்டி
ரிசபம்- சாந்தம்
மிதுனம்- வரவு
கடகம்- அசதி
சிம்மம்-கவனம்
கன்னி- வெற்றி
துலாம் – உதவி
விருச்சிகம் -வரவு
தனசு – நற்செயல்
மகரம்- ஆதரவு
கும்பம்- சிக்கல்
மீனம் – பாசம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
june_09
கிரண்பேடி பிறந்த தினம்(1945)
தங்கனீக்கா குடியரசானது(1962)
வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது(1934)
வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)_
__________________
மேலும் விபரங்களுக்கு
#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995