வாஸ்து காலண்டர் 22.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 22.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
8ந் தேதி ஞாயிறு.
மதியம் 1.01 வரை தே.சப்தமி திதி.பிறகு அஸ்டமி திதி.   இரவு 10.33  வரை அவிட்டம்  நட்சத்திரம்.அதன் பிறகு சதயம்.

இன்றைய
ராகுநேரம்: 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

ஒரு நீளமான இடம் இருக்கிறது.  எடுத்துக்காட்டாக 200 அடிகள் இருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தில் முதன்மை பகுதியாக வடக்கு அல்லது, கிழக்கு இருக்கும் என்று சொன்னால், முதன்மை பகுதியாக இருக்கக்கூடிய கிழக்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும் மட்டுமே வீடு கட்டுவேன் என்று முடிவு செய்தால் வாஸ்து ரீதியாக மிக மிக தவறு . மொத்த இடத்தில் தெற்கு அல்லது, மேற்கு சார்ந்த இடத்தில்தான் இல்லம் அல்லது கட்டிடம் கட்ட வேண்டும். இல்லை நான் முதலில் இந்த கட்டிடம் வடக்கு பகுதியில், கிழக்கு பகுதியில் கட்டிக் கொள்கிறேன் பிற்காலத்தில் கட்டுகிறேன் என்று சொன்னால், அது கட்டிடம் அமையாத இடமாக மாறிவிடும். தயவுசெய்து அந்த தவறுகளை யாரும் செய்ய வேண்டாம். வாஸ்து உண்மையில்லை என்று நம்பக்கூடிய மனிதர்கள்தான் அந்த வேலையை செய்வார்கள். கடைசி முடிவாக ஒரு எடுத்துக்காட்டாக 200 அடிகள் இருக்கிறது என்று சொன்னால், இருநூறு அடிகளில் 60 அடிகளை தெற்கு புறத்தில் அல்லது மேற்புறத்தில் விட்டபிறகு மீதி இருப்பது என்பது 140 அடிகள் இருக்கும். இந்த இடத்தில் ஐம்பது அடிகளுக்கு கட்டிடத்தை கட்டிக்கொண்டு, மீதி 90 அடிகளை காலி இடமாக வைத்தால் கூட தவறு கிடையாது. ஆனால் முழுக்க முழுக்க மொத்த 200 அடிகளின் வடக்குப் பகுதியிலும் அல்லது, கிழக்கு பகுதியிலும் 50 அடிக்குள் கட்டிடம் கட்டி, தெற்கு சார்ந்த அல்லது, மேற்கு சார்ந்த பகுதியை காலி இடங்களாக போடுவது மிக மிக வாஸ்துவில் பெரிய குற்றமாகும். அந்த தவறுகளை தயவுசெய்து செய்ய வேண்டாம். அப்படி செய்வது என்பது தனக்குத் தானே குழி பறித்து  கொள்வதற்கு சமம் .

_______________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்-  ஆக்கம்
ரிசபம்- பக்தி
மிதுனம்- நிறைவு
கடகம்- உறுதி
சிம்மம்- உதவி
கன்னி- பாராட்டு
துலாம் –  பணிவு
விருச்சிகம்- அறிவு
தனுசு- ஆர்வம்
மகரம்- தெளிவு
கும்பம்- போட்டி
மீனம் –   வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_22

சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்

இலங்கை குடியரசு தினம்(1972)

ஏமன் தேசிய தினம்

விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)

ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)

முதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading