வாஸ்து பார்க்க வேண்டுமா? வேண்டாமா? | தமிழ் காலண்டர் 20.5 2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 20.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
6ந் தேதி வெள்ளிக்கிழமை.
மாலை 5.31 வரை தே.பஞ்சமி திதி.பிறகு தே.சஷ்டி திதி.   நள்ளிரவு 1.06  வரை உத்திராடம் நட்சத்திரம்.அதன் பிறகு திருவோணம்.

இன்றைய
ராகுநேரம்: 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

வாஸ்து பார்க்க செல்கின்றபோது, ஒருவர் விரும்பி அழைக்கும் போது வாஸ்துவில் என்ன இருக்கிறதோ அதை முழுவதுமாக சொல்லுகிற நிலை தான் என்னுடைய நிலை. ஆனால் என்னுடைய சொந்தக்காரர் வந்தார், என்னுடைய அக்கா வீட்டுக்காரர் வந்தார், அதாவது என்னுடைய மச்சான் வந்தார் அல்லது, என்னுடைய தம்பி வந்தார், என்னுடைய அண்ணன் வந்தார் என்று சொல்லி மீண்டும் பேசுவார்கள். அவர்களையும் என்னிடம் பேச வைப்பார்கள். இதில் உள்ள விஷயம் என்னவென்றால் வருகிற நபர் தமிழ்நாட்டின் முக்கிய அரசு பதவிகள் அல்லது, அரசியல் துறையில் இருக்கிற பெயரும் புகழும் பெற்ற மனிதராக இருப்பார். அவருடைய அறிமுகம் நமக்கு கிடைக்கும் இந்த இடத்தில் . அவர் ஒன்று சொல்வார் இதை செய்யுங்கள் என்று. ஏன் என்று சொன்னால் அவர் இருக்கிற பதவி அவருடைய நிலை அப்படி. எதையும் அதிகார நிலையில் சொல்லிய காரணத்தால் நம்மிடமும் அதே விஷயத்தை கொஞ்சம் நாசுக்காக சொல்லுவார். இந்த இடத்தில் நான் வாஸ்துபடி மறுக்கக் கூடிய சூழ்நிலை இருக்கும். மறுத்துதான் ஏற்கனவே மாற்றம் சொல்லி இருப்பேன். அவர்கள் வற்புறுத்தி வேறு மாற்றங்கள் செய்யுங்கள் என்று சொல்வார்கள். இந்த இடத்தில் அப்படி ஒருவர் மாற்ற சொல்லுகிறார் என்றால், நீங்கள் சொல்வது போல இருக்கட்டும் அவர்கள் சொல்வதை செய்து கொடுங்கள் கொஞ்சம் தவறாக இருந்தாலும் பரவாயில்லை என்று என்னை அழைத்த மனிதர் சொல்வார். அப்படிப்பட்ட மக்களுக்கான இந்த பதிவு.

நான் சொல்லியதை சரியான முறையில் மாற்றம் செய்தால் தவறு கிடையாது. ஆனால் தவறான முறையில் செய்யுங்கள் என்று யாராவது மாற்றி என்னிடம் சொல்லச் சொன்னால் நிச்சயமாக சொல்ல மாட்டேன். அப்படி மற்றவர்கள் சொல்வதை கேட்கிற மக்களாக இருந்தால் என்னை வாஸ்து பார்க்கக்கூட அழைக்க வேண்டாம். அதற்காக சொல்கிற பதிவு இது ஆகும். ஆகவே நான் சொல்கிற விஷயத்தை செய்வதாக இருந்தால் அழையுங்கள். இல்லை என்றால் என்னை அழைப்பது கூட உங்களுக்கும் பணம் விரையம். எனக்கும் நேரம் விரையம். இது முழுக்க முழுக்க உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓடுகிற விஷயம் கிடையாது. நான் பணம் பண்ண செய்யும் விசயமும் கிடையாது. நீங்கள் அழைக்கவில்லை என்றால் வேறு ஒருவர் என்னை அழைக்க ரெடியாக இருப்பார்கள். நான் சொல்வதை ஏன் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு உறுதித்தன்மையை கொடுக்கிற செயல் ஆகும். ஆக உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது வாஸ்து விஷயத்தை தவறாகச் செய்ய சொன்னால் உங்களுக்கு நேரம் தவறாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆகவே இந்த இடத்தில் ஒருவருக்கு நன்மை வேண்டும் என்று சொன்னால் அவர் தான் யோசிக்க வேண்டும். உங்களுக்காக மற்றவர்கள் யோசிப்பது என்பது இந்த காலத்தில் குறைவு.இதனை தெரிந்து கொண்டு செய்வது நலம்.

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்-  போட்டி
ரிசபம்- அமைதி
மிதுனம்- களிப்பு
கடகம்- மகிழ்ச்சி
சிம்மம்- வெற்றி
கன்னி- உயர்வு
துலாம் – நேர்மை
விருச்சிகம்- வெற்றி
தனுசு- தாமதம்
மகரம்- சோர்வு
கும்பம்- பக்தி
மீனம் – சினம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_20

கமரூன் தேசிய தினம்

ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)

குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)

உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading