வாஸ்து காலண்டர் தமிழ் 20.8.2022

ஈஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

20.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 20.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
4ந் தேதி சனிக்கிழமை இரவு 1.10  வரை நவமி திதி. பிறகு தே. தசமி திதி . விடியற்காலை 4.24 வரை  ரோகிணி நட்சத்திரம். பிறகு மிருகஷிரிசம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து வழிகள் வாசல்கள் மற்றும் வெளியில் செல்கிற என்கிற விஷயம் மிக மிக முக்கியம். காலையில் எழுந்தவுடன் கிழக்கு வாசல் திறப்பது ஆரோக்கியத்தை அழைப்பது ஆகும். ஒரு சில இடங்களில் கிழக்கு வாசல் இல்லாத இடங்களில் வடக்கு வாசல் திறக்க வேண்டும் அதனால் வாடை காற்று உள்ளே புகுத்த முடியும். அதே போல மேற்கு பார்த்த வீடுகளுக்கு வடமேற்கு மேற்கு வாசலை திறந்து வையுங்கள். ஒரு முன்னேற்றத்தின் வாசலை திறந்து வைக்கும் நிகழ்வாக இருக்கும். ஆனால் அதன் வாசலுக்கு எதிர் வாசல் என்பது கிழக்கு புறத்தில் வேண்டும். வாழ்க்கையின் வெற்றியை, எதையும் போராடி எதற்கும் பயப்படாத வாழக்கூடிய வாசலாக தெற்கு சார்ந்த தென்கிழக்கு தெற்கு வாசல் இருக்கின்றது. தாராளமாக திறந்து வையுங்கள். வாழ்க்கையை வெற்றி கொள்ளுங்கள். ஆனால் அந்த வாசலுக்கு நேர் எதிரில் வடக்கு புறத்தில் வாசல் என்பது கண்டிப்பாக வேண்டும். இந்த விதியை  ஒரு இல்லத்தில் புகுத்தாது,அதனை  வாஸ்து வீடு  என்று சொன்னால் நான் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். அடுத்ததாக தவறான வழிகள் எது என்று பார்ப்போம் .

கிழக்கு அக்னியில் பாதையை கொடுப்பது திருடர்களுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது என்று சொல்லுவேன். அதேபோல தெற்கு சார்ந்த தென்மேற்கு மூலையில் வாசல் வைப்பது பெண்களின் சுகத்தை அழிப்பதற்கு சமம் என்று சொல்லுவேன். தீராத கடன் இருப்பதும் தெற்குவாசல் தான். மேற்கு தென்மேற்கு மூலையில் வழி வைப்பது ஆண்களை விபத்துக்கு தள்ளுகிற வாசலாக இருக்கும் என்று சொல்லுவேன். அடுத்ததாக வடக்கு பகுதியில் வடமேற்கு பகுதியில் வாசல் இருப்பது என்பது ஒரு இல்லத்தில் எதிர்மறை பலன்களை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிற வாசலாக அந்த வழி இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு இல்லத்தில் வட கிழக்கு பார்த்த வடக்கு வாசல் இருப்பது வசந்தத்தை கொடுக்கும். ஒரு இல்லத்தில் வடகிழக்கு கிழக்கு பார்த்த வாசல் இருப்பது வாழ்க்கையில் உயர்வை கொடுப்பது. ஒரு இல்லத்தில் தென்மேற்கு சார்ந்து வாசல் இருப்பது அந்த வாசல் சார்ந்த இடத்தில் படுத்து உண்டு உறங்கி வாழ்வதென்பதற்கு பேசாமல் சாலைகளில் படுத்து உறங்கலாம் என்று சொல்லுவேன். இதே விதிதான் மேற்கு சார்ந்த தென் மேற்கு வாசலுக்கும் பொறுந்தும். ஆக மேற்கூறிய தோஷத்தை கொடுக்கும் வழிகளிலேயே மிகவும் மோசமான வழியாக பார்க்கப்படுகிற விஷயம் தென்மேற்கு 190 டிகிரி களிலிருந்து 260 டிகிரிகள் வரை இருக்கின்ற வாசல்கள் மற்றும் வழிகள் மிகவும் மோசமான வாசல்கள் என்று சொல்லுவேன். அந்த வாசல் சார்ந்த வீட்டில் வசிப்பதற்கு பேசாமல், ஒரு சிறிய இடத்தில் கூரைச்சாலை அல்லது ஓலைச்சாலை போட்டு கூட வாழ்ந்து கொள்ளலாம். ஆக வாஸ்துவில் வழிகள் என்பது மிக மிக முக்கியம். அதை பின்பற்றுங்கள்.
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பெருமை
ரிசபம்- சுகம்
மிதுனம்- வரவு
கடகம்-  நிறைவு
சிம்மம்- வெற்றி
கன்னி- மேன்மை
துலாம் –  செலவு
விருச்சிகம்- சிக்கல்
தனசு – களிப்பு
மகரம்- தாமதம்
கும்பம்- கவலை
மீனம் – அசதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

மனப்பாக்கம் வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Manapakkam vastu consultant,
மந்தவெளி வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Mandaveli vastu consultant,
மாங்காடு வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,

________________________

#வரலாற்றில்_இன்று
# August_20

உலக கொசு ஒழிப்பு தினம்

நேபாள தந்தையர் தினம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)

ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)

இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)

இலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading