வாஸ்து காலண்டர் தமிழ்நாடு | வாஸ்து ஞானம்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

27.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.55.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 27.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
11ந் தேதி புதன் கிழமை . இரவு 9.13  வரை சதுர்தசி திதி. பிறகு அமாவாசை திதி.நாள் முழுவதும் புனர்பூசம்.

ராகு எமகண்ட நேரம்:
12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு வருடம் அல்லது, இரண்டு வருடம், 3 வருடங்களாக கூகுள் சார்ந்த விஷயங்களில் வாஸ்து சார்ந்த அறிவை எடுத்து கொண்டும், youtube வழியாக வாஸ்து சார்ந்த வீடியோக்களை பார்த்தும், முழுவதும் நாம் தெரிந்து கொண்டோம் என்று முடிவு செய்து ஒரு இல்லத்தை கட்டமைக்கிற செயலை செய்வது என்னை பொறுத்த அளவில் தவறு என்று சொல்வேன். என்ன காரணம் என்று சொன்னால், ஏதாவது ஒரு நமது வாழ்க்கையில் இருக்கும் கர்மா சார்ந்த ஒரு சில விஷயங்கள் நம்மை அறியாமல் தவறு செய்யக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனை எதற்காக இதனை சொல்லுகிறேன் என்று சொன்னால், நான் வாஸ்து நிபுணர் ஆன பிறகு கூட ஒரு சில இடங்களில் தவறு செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். அதாவது வாஸ்து பார்க்க செல்லுகிற இடங்களில் இதற்கு காரணம் என்ன என்று சொன்னால் அவர்களின் கர்மா சார்ந்த நிகழ்வுகள் தான் அந்த வேலையை செய்து விடுகின்றன என்று முடிவு செய்ய வேண்டும். அப்பொழுது என்னை அழைத்தாலும் அந்த தவறுதானா? என்ற ஒரு கேள்வியை நீங்கள் கேட்கும் பொழுது, அந்த இடத்தில் ஓரளவுக்கு ஒரு 80 சதவீதம் அளவிற்கு தவறு செய்யாத மனைகளாக அமைத்துக் கொள்ளலாம். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அது சார்ந்த தவறுகளும், ஏதாவது ஒரு நிகழ்வுகளை உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில சமிக்ஞை வழியில் கொடுக்கும். அந்த நேரத்தில் மீண்டும் என்னை போல் இருக்கிற ஒரு வாஸ்து நிபுணரையோ அல்லது, வேறு ஒரு வாஸ்து நம் நிபுணரையோ செகண்ட் ஒப்பினியன் என்று சொல்லக்கூடிய நிலைக்காக பார்க்க வேண்டும் என்பேன்.

ஒரு மனிதன் எத்தனையோ விசயங்களுக்காக செலவு செய்கின்றனர்.இந்த இடத்தில் வாஸ்து பரிசோதனை சார்ந்த விசயத்தில் செலவு பார்க்காமல்  பணம் செலவு செய்ய வேண்டும்.ஆக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், வேறு ஒரு மனிதரை அழைத்துப் பார்த்து சரி பார்த்துக் கொள்வது நல்லது. இந்த இடத்தில் எது எப்படி இருந்தாலும், எத்தனையோ விஷயங்களுக்கு நம் வாழ்க்கையில் செலவு செய்கிறோம். இந்த இடத்தில் வாஸ்து  நிகழ்வுகளில், வாஸ்து விஷயத்தில் சரியான முறையில் ஒரு கட்டிடம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தால், ஒருவரை பார்ப்பதற்கு பதிலாக இருவர் சார்ந்த இரு  வாஸ்து நபர்களை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்வது நலம் என்று சொல்வேன். உங்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. ஏன் என்று சொன்னால் நிறைய மக்கள் வாஸ்து படிதான் கட்டியிருக்கிறேன் என்று சொல்லி தவறுகளை செய்து விடுவார்கள்.அப்படிப்பட்ட இடங்களில் ஏதாவது கஷ்டம் இருக்கும்.ஆக அதற்கு பிறகு என்னை  அழைப்பார்கள் .
அந்த இடத்தில் நான் சென்று பார்த்தால் அவர்கள் தவறுகள் செய்திருப்பார்கள். ஆக அந்த தவறுகளை தயவு செய்து செய்ய வேண்டாம். இது ஒரு வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு பதிவு.
  ______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நலம்
ரிசபம்- முயற்சி
மிதுனம்- பயணம்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தொல்லை
கன்னி-பரிசு
துலாம் –  கவலை
விருச்சிகம்- முயற்சி
தனசு –  போட்டி
மகரம்- அனுகூலம்
கும்பம்- நன்மை
மீனம் –   நலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_27

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம்(2015)

தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)

3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)

பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)

பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading