நாளைய பஞ்சாங்கம்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய பஞ்சாங்கம் 23.8.2022

  #பிரதோஷ_நாள்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

24.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 24.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
8ந் தேதி புதன்கிழமை  காலை 8.33 வரை தே.த்வாதசி திதி . பிறகு திரயோதசி திதி  மதியம் 1.24 வரை புனர்பூசம் நட்சத்திரம். பிறகு பூசம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து சார்ந்த விஷயத்தில் தெற்கு பார்த்த வீடுகளுக்கு படிகளை எங்கு அமைக்கலாம் என்ற சந்தேகத்தை வாஸ்து நான் பார்க்க போகிற இடத்திலும், பொதுவான மக்களும் கேள்விகளாக கேட்கின்றனர். இந்த பதிவு என்பது நான் ஒரு வாஸ்து  சொல்கிறேன் என்று சொன்னால் அதை அக்குவேறு ஆணிவேராக பிரித்துப் பார்த்துதான் ஒரு விஷயத்தை சொல்லுவேன். அந்தவகையில் வாஸ்து  சொல்லுகிற விஷயம் எல்லாமே எனக்கு தெரிந்து சொல்கிற விஷயம் தான். ஒரு விஷயம் தெரியவில்லை என்று சொன்னால் அதனை உறுதிப்படுத்திக் கொண்டு அது வாஸ்து விதிகளாக மாற்றி கொடுக்கிற விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு படி போடலாம் என்று ஒரு சிலர் சொல்கின்றனர்.  போட்டுக்கொள்ளுங்கள் ஒரு 40 அடிக்கு இடம் இருக்கிறது என்று சொன்னால்  அமைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் தெற்கு பார்த்த வீடுகளுக்கு படிகளை அமைப்பது என்பது முதல் தரமாக வட மேற்கு பகுதியிலும், தென் மேற்குப் பகுதியிலும் அமைத்துக்கொள்ளலாம். இந்த இடத்தில் தென்மேற்கு இரண்டாம் தரம் என்றும் வட மேற்கு முதல்தரம் என்றும் பிரித்துப் பார்க்க அவசியம் கிடையாது. இரண்டும் ஒன்றாக தான் என்னால் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அப்படி அமைக்கின்ற படிகளை சுவரில்லாத தூண் இல்லாமல்  அமைக்கவேண்டும். இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அமைக்கக்கூடாது.

அதேசமயம் உட்புறப் பகுதியில் படிக்கட்டு இருக்கக்கூடாத இடங்களாக நான்கு மூலைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் தென்மேற்குப் பகுதியில் படிகளை ஒரு பொருளாக, செயற்கையாக இரும்பு படிகளை செய்து,அதனை இரும்பு கொண்டோ, அல்லது தேனிரும்பு கொண்டோம் எஸ் எஸ் படிகளாக, மரம் சார்ந்த அமைப்பிலோ, பிளாஸ்டிக் அமைப்பிலோ படிகளை அமைத்துக் கொள்ளும் பொழுது அந்த இடத்தில் தென்மேற்கு மூலை படியாக வருவது கிடையாது. அது வாஸ்துவில் அதிஅற்புதமான விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. ஒரு சில மக்கள் யூட்யூப்பில் வாஸ்து நிபுணர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு என்னிடம் வாதாடுவார்கள். நீங்கள் தென்மேற்கு பகுதியில் படிகளை அமைக்க சொல்கிறீர்கள். அந்த வாஸ்து நிபுணர் போடக்கூடாது என்று சொல்கிறார். நீங்கள் போடலாம் என்று சொல்கிறீர்கள் என்று சொல்வார்கள் . ஆக இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயம் வாஸ்துவில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை என்று நாம் வாஸ்து அறிவு தரவரிசைப் பட்டியல் வைக்கும்பொழுது  எல்லோரும்2 ,3 நிலைகளைக் கடந்து எல்லோரும் இருப்பார்கள். மூன்றாம் நிலையில் இருக்கிற ஒரு  வாஸ்து நிபுணர் அந்த இடத்தில் படிக்கட்டு கூடாது என்று சொன்னால் நான்,4ம்  இடத்தில் இருக்கிறேன் என்று சொல்லுவேன்.அதனால் நான் வைக்கலாம் என்று சொல்வேன். ஒரு ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணப்படுகிறார் என்று சொன்னால், அவர் சென்னையில் இருக்கிறார் தற்போது என்று சொல்வேன்.ஆனால் நான் தற்போது உளுந்தூர்பேட்டையை கடந்து விட்டேன் என்று சொல்வேன். அதாவது நேற்று, இன்று, நாளை என்று சொல்லும்பொழுது ஒரு தவறான  விஷயத்தைச் சொல்கிற வாஸ்து நிபுணர்கள் நேற்று என்கிற  நிலையில் இருக்கிறார்கள். நான் இன்றைய நிலையில் இருக்கிறேன் என்று சொல்லுவேன். ஆக உண்மையான வாஸ்து நண்பர்களிடம் நீங்கள் வாஸ்து பார்க்கிறீர்களா?. அல்லது தவறாக தெரியாத ஒரு விஷயத்தை சொல்கிற வாஸ்து  நிபுணரிடம் பார்க்கிறீர்களா?. என்பதை தெரிந்து செயல்படுங்கள் என்று தான் சொல்வேன். இந்த இடத்தில் லலிதா ஜூவல்லரி விளம்பரம் போலத்தான். அவர் அந்த நிறுவனத்தின் முதலாளி எப்படி தங்கம் சார்ந்த விஷயத்தை சொல்கிறாரோ, அதுபோலத்தான் நான் சொல்கிற வாஸ்துவும். வாய்மையே வெல்லும். உண்மைக்கு எப்பொழுதும் ஒரு நிரந்தர இடம் ஒன்று உண்டு. என்னை சந்திக்கின்ற மக்களுக்கு சொல்லுகிற ஒரு விஷயம். தயவுசெய்து அவர் சொன்னார் , இவர் சொன்னார், இவர் யூடியூப்பில் சொல்கிறார், அவர் கட்டுரை எழுதியிருக்கிறார் , என்று கண்ணை மூடிக்கொண்டு என்னிடம் சொல்லாதீர்கள். நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் என்னை நம்புங்கள்  என்னை நம்பவில்லை என்று சொன்னால் அவர் சொல்வதையே செய்து கொள்ளுங்கள். இந்த இடத்தில் உங்களுடைய நேரம் மிக மிக முக்கியம்.. நேரம் நன்றாக இருந்தால் மட்டுமே எனது ஆலோசனையை ஒருவர் கேட்க முடியும். அவருக்கு நேரம் சரியில்லை என்று சொன்னால் எனது ஆலோசனையை அவர் கேட்க மாட்டார் என்று எனக்கு தெரியும்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிசபம்- தேர்ச்சி
மிதுனம்- ஆக்கம்
கடகம்- நலம்
சிம்மம்- சினம்
கன்னி- அசதி
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- துயரம்
தனசு – சோதனை
மகரம்- இரக்கம்
கும்பம்- குழப்பம்
மீனம் – சோதனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_24

உக்ரேன் விடுதலை தினம்(1991)

கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)

நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)

ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)

நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading