நாளைய காலண்டர் வாஸ்து 25 6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#இன்றைய_காலண்டர்_வாஸ்து
#Today_Vastu_calendar

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

25.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 25.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
11ந் தேதி காரிவாரம். இரவு 1.12 வரை தே.த்வாதசி திதி.  பிறகு தே.திரயோதசி திதி. காலை 10 09 வரை பரணி பிறகு கிருத்திகை  நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து வகையில் எட்டு திசைகளில் இருக்கும் வாஸ்து குற்றங்களின் பலன்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் வட கிழக்குப் பகுதி என்று சொல்லக்கூடிய ஈசானிய பகுதி குற்றம், ஒரு இடத்தில் பெரிய அளவில் இருக்கும் பொழுது அதன் பலாபலன்களும் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் வடகிழக்குப் பகுதியில் பள்ளம் என்பது இருக்கும் பொழுது அனைத்து செல்வங்களின் வரவாக இருக்கும். அது வாரிசு மற்றும், சந்ததிகள் மற்றும், செல்வநிலை  தொழில் சார்ந்த உற்பத்தி நிலையை தொடக்கி வைக்கும் நிகழ்வாக, முன்னேற்றத்தை கொடுக்கும் வாஸ்து  அந்த இடத்தில் பெரிய அளவில் பேசும். அதே சமயம் அந்த இடத்தில் மற்றவர்கள் வீடுகள் இருக்கும் பொழுதும், கொஞ்சம் கூட இடம் இல்லாது அமையும் போதும், அந்த இடத்தில் பக்கத்தில் ஒரு கட்டிடம் வந்துவிடும். அந்த கட்டிடம் அந்த இடத்திற்கு மேடு என்று எடுத்துக் கொள்ளப்படும். அந்த இடத்தில் அப்படிப்பட்ட நிலை வரும்பொழுது வறுமை நிலையை  அங்கிருந்தே  கொடுக்கும்.

வறுமை என்பது பணத்தில் மட்டும் கிடையாது. உறவுகள் சார்ந்த வாரிசு அடிப்படையில் இல்லாத நிலையை கொடுத்துவிடும்.அல்லது திருமணம் சார்ந்த தடையை கொடுத்து அந்த இடத்தில் அடுத்த வாரிசு சம்மந்தப்பட்ட வறுமை நிலைக்கு தள்ளப்படும். ஆக ஒரு இடத்தில் ஈசானியம் என்பது மூலை மட்டத்திற்கு பெருக கூடாது. அதாவது 90° டிகிரியில் இருக்க வேண்டும்.அல்லது அந்த இடத்தில் மூலமட்டம் இடத்திற்கு வராது 85° டிகிரி இருந்தாலும் கூட குற்றம் கிடையாது. ஆனால் அந்த இடம் திசைகாட்டி என்கிற விஷயத்தை கடந்து மூலமட்டம் மட்டும் 90 டிகிரிக்கு இல்லாது, 95° 100° டிகிரி 110° விரிந்து இருக்கும் பொழுது மிகப்பெரிய குற்றம் உள்ள இடமாக மாறிவிடும். இந்த விசயத்தை கவனித்து ஒரு இல்லத்தை, ஒரு தொழிற்சாலையின் கட்டிடத்தை, ஒரு நிறுவனத்தின் கட்டிடத்தை, கூர்ந்து பார்த்து அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் இடமாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் வாஸ்து உண்மையா? பொய்யா? என்கிற நிகழ்வு ஈசானிய குற்றங்கள் மட்டுமே ஒரு மனிதனுக்கு  உணர்த்திவிடும்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-   கீர்த்தி
ரிசபம்-  தடங்கள்
மிதுனம்- சலனம்
கடகம்- தாமதம்
சிம்மம்- லாபம்
கன்னி- பரிவு
துலாம் – பயம்
விருச்சிகம்- பரிசு
தனசு – நிம்மதி
மகரம்- அலைச்சல்
கும்பம்- வரவு
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_25

இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது (1975)

விண்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)

குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)

உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)

பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading