சென்னை வாஸ்து தினசரி நாட்காட்டி 29.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

29.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.48.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 29.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
15ந் தேதி சோமவாரம்.  காலை 8.23 வரை அமாவாசை திதி. பிறகு பிரதமை திதி.இரவு 9.53 வரை திருவாதிரை நட்சத்திரம் பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

எட்டு திசை வாஸ்து குற்றங்கள் வரிசையில் ஒவ்வொரு திசைகளாக பார்த்து வருகிறோம். அந்தவகையில் தென்மேற்கு என்று சொல்லக்கூடிய நிருதி திசையில் தவறான பலன்கள், நல்ல பலன்கள் சார்ந்த, இடத்தில் இருக்கும் குற்றங்கள், இடத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் . தென்மேற்கு நிருதி என்கிற மூலை 90 டிகிரிக்கு  மட்டத்தில் இருக்க வேண்டும். அந்த இடம் எக்காரணம் கொண்டும் குறுகுவதும்,  விரிவாக்கம் ஆவதும் குற்றம். அதேசமயம் ஒரு இடத்தில் கட்டிடம் இருக்கிறது. அந்தக் கட்டடத்தில் தெற்கு நைருதியும் மேற்கு நைருதியும் ஒரே அளவான மிகக்குறைந்த இடமாக இருக்க வேண்டும். இந்த விதி என்பது வீட்டிற்கும்  பொருந்தும். வீட்டுக்கும் சுற்றுச் சுவருக்கும் இடையே பொருந்தும். வீட்டுக்கு வெளியே அதாவது , சுற்றுச் சுவருக்கு வெளியே இருக்கிற பகுதிக்கும் இந்த விதிகள் பொருந்தும். இதனை கவனித்து நைருதி மூலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு இடத்தில் நைருதி குற்றங்கள் இருக்கும் பொழுது தவறான பலன்கள் கொடுக்கும்.

அதாவது தவறான பழக்கங்களுக்கு அடிமையாவது, நீண்ட கால வியாதிகள், மரணங்களை ஏற்படுத்துவது, வாழ்வு முடிவதற்கு முன்பாகவே வாழ்க்கையின் இறுதி காலத்திற்கு செல்வதற்கு முன்பாகவே மரணம் ஏற்பட்டு விடுவது. இன்னும் ஒரு பத்து பதினைந்து இருபது ஆண்டுகள் வாழ்வார்கள் என்று சொல்கிற நிலையில் மரணம் ஏற்பட்டு விடுவது.ஆக இது போன்ற நிகழ்வுகளை கொடுக்கும். இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது தென்மேற்கு தெற்கு, மற்றும் தென்மேற்கு மேற்கு பகுதியில் அதிக காலியிடங்கள் இருப்பது.தெற்கு மேற்கு பகுதியில் வடக்கு கிழக்கு பகுதியை விட அதிக காலியிடங்களாக வைத்திருப்பது, வடக்கு கிழக்கு விட பள்ளமாக இருப்பது , இது போன்ற விஷயங்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது, மேற்கூறிய பலன்களை கொடுக்கும். அதே சமயம் தென்மேற்கு திசை என்பது மூல மட்டத்திற்கு இருக்க வேண்டும்.வடக்கும் கிழக்கும் சரிவாக, வடக்கும் கிழக்கும்  பள்ளமாகவும், அதனைவிட வடமேற்கு கொஞ்சம் உயரமாகவும், அதனைவிட தென்கிழக்கு உயரமாகவும், தென்மேற்கு உயரமாகவும் இருக்கும் பொழுது அந்த இடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி, புகழின் உச்சாணிக் கொம்பை பெறுவது போன்ற விஷயங்கள் நடக்கும் . ஆக மனித வாழ்க்கையில்  வசிக்கும் வீட்டில் தென்மேற்கு எப்பொழுதும் கெட்டுப் போகக் கூடாது. அப்படி கெட்டுப் போனால் வாழ்க்கை பாதையும் கெட்டுப்போகும் . ஆக வாஸ்து ரீதியாக தென்மேற்கு திசை மிகச்சரியான வாஸ்து முறையில் இருக்கவேண்டும். தென் மேற்கு திசையின் பலன்கள் முழுவதும் வீட்டில் இருக்கிற வயது 50 வயது 47 வயது கடந்த குடும்ப தலைவர்களுக்கும் குடும்ப தலைவிகளுக்கும் பேசும்.அவர்கள் வாழும் காலம் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் தென்மேற்கு வாஸ்து முறையில் இருக்க வேண்டும்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- உறுதி
ரிசபம்- பெருமை
மிதுனம்- சுகம்
கடகம்- உயர்வு
சிம்மம்- தெளிவு
கன்னி- நிறைவு
துலாம் – இயக்கம்
விருச்சிகம்- அலைச்சல்
தனசு – பயம்
மகரம்- அமைதி
கும்பம்- குழப்பம்
மீனம் – ஆனந்தம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_29

செஷெல் விடுதலை தினம்(1976)

வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)

பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)

அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading