ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.03 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.
தினசரி நாள்காட்டி 18.10.2024 குரோதி வருடம் ஐப்பசி மாதம் 1ந் தேதி. வெள்ளிக்க்கிழமை. மதியம் 1.17 வரை தே.பிரதமை பிறகு துதியை திதி . மதியம் 1.15 வரை அசுவினி. பிறகு பரணி நட்சத்திரம்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
____________________
#Vastu_For_Home
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu
_________________________
Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:
ஒரு இல்லத்திற்கு வர்ணம் பூசுகிற நிகழ்வு என்பது வாஸ்து வகையில் செய்கின்ற பொழுது அந்த வீடு ஒரு யோகத்தைச் செய்கிற வீடாக இருக்கும். அதே சமயம் ஒரு இல்லத்திற்கு அழகை கொடுக்குற நிகழ்வாகவும் இருக்கும். ஆக வர்ணங்களை ஒரு இல்லத்திற்கு வர்ணங்கள் அடிக்கிற நிகழ்வு என்பது எப்பொழுதுமே கோடை காலங்களில் செய்வது நல்லது. அதாவது மாசி பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் செய்கின்ற பொழுது பெரிய அளவில் அந்த நிறம் என்பது வீட்டோடு நன்றாக ஒட்டி விடும். பெரிய அளவில் மழையில் கரைகிற நிகழ்வு இருக்காது. அதாவது மழைக் காலங்களில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் மாசி பங்குனி சித்திரை மாதங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும், அதிகபட்சம் ஏழு வருடங்களுக்கு ஒரு முறையும் நிறங்கள் அடிக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு சிமெண்ட் கலந்த வர்ணங்கள் தான் சரியானது. ஆயில் பெயிண்ட் அது நீண்ட நாட்களுக்கு வராது. ஆங்காங்கே திட்டு திட்டாக தெரியும். ஆகவே டிஸ்டம்பர் சார்ந்த வர்ணங்கள் தான் சரி. வர்ணங்களின் வகைகளில் பெயிண்ட் சார்ந்த வகைகளில் சுண்ணாம்பு ஒரு வகை குறைந்த செலவும், அதைவிட சிமெண்ட் பெயிண்ட் கொஞ்சம் அதிகமாகவும், டிஸ்டம்பர் அதனை விட கொஞ்சம் அதிக செலவாகும். பிளாஸ்டிக் எமல்சன் அதைவிட கொஞ்சம் அதிகமாகவும், சிந்தடிக் எனாமல் அதைவிட கொஞ்சம் அதிகமாகவும், நிறைவாக பாலிதீன் எனாமல் என்று சொல்லக்கூடிய வர்ணம் அதிக செலவாகவும் இருக்கும். உங்களுடைய பட்ஜெட் அதற்கு தகுந்தார் போல் நிறங்களை அடித்துக் கொள்வது சாலச்சிறந்தது. எப்பொழுதுமே எந்த கட்டிடத்திற்கும் முதலில் பிரைமர் கலவை வர்ணங்களை அடிக்க வேண்டும். இது நீண்ட நாட்கள் குறைவில்லாமல் இருக்கும். அந்த வகையில் வீட்டின் வரவேற்புரைக்கு மஞ்சள் நீலம் பச்சை ஐவரி வர்ணங்கள் வாஸ்து வகையில் சிறந்தது. படுக்கை அறைக்கு நீல நிறம் மிகச் சிறந்தது. சமையலறைக்கு வெண்மை நிறமும், மஞ்சள் நிறமும் ஆரஞ்சு நிறமும் ரோஸ் நிறங்களும் சிறப்பு. உணவு உண்ணுகின்ற அறைக்கு பச்சை நீளம் வெள்ளை நிறங்கள் வாஸ்து முறையில் சிறப்பு.
பாத்ரூம் சார்ந்த பகுதிகளுக்கு பிங்க் மற்றும் நீல நிறங்களை உபயோகிப்பது சாலச் சிறந்தது. இது வாஸ்து வகையில் யோகத்தை கொடுக்கிற நிறங்களாக இருக்கும்.
______________________________
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995