உயர் அழுத்த மின்சார லைன் வீட்டுக்கு அருகே உள்ளதா?வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 7-4-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 24ந் தேதி. செவ்வாய்க்கிழமை. மாலை 4.36 வரை பஞ்சமி திதி. பிறகு தே. சஷ்டி திதி. நாள் முழுவதும் கேட்டை நட்சத்திரம். யோகநாள் குறைவு. சமநோக்குநாள்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

 

வாட்ஸ்அப் தொடர்பில்:

https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 05 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 05
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

வராக ஜெயந்தி

என்பது மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் (பன்றி முகம்) தோன்றிய தினமாகும், இது பாத்ரபத மாத சுக்ல பக்ஷ திருதியை நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு, ஹிரண்யாக்ஷன் என்ற அரக்கனை வதம் செய்து, பாதாளத்திலிருந்து பூமியை மீட்டு நிலைநிறுத்தினார். இந்த வழிபாடு செல்வம் மற்றும் தடைகளை நீக்கும் நாளாக கருதப்படுகிறது.

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

வாஸ்து வகையில் எதிர்மறை சக்திகளாக மேடு பள்ளங்களை பார்க்கிறோம். உயரங்களை பார்க்கிறோம். பள்ளங்களை பார்க்கிறோம்m அதேபோல ஏற்ற இறக்கங்களை பார்க்கிறோம் . ஏன் பக்கத்தில் இருக்கிற கட்டிடங்களை பார்க்கிறோம் . என் பக்கத்தில் இருக்கிற ஓடைகளை பார்க்கிறோம். குளங்களை பார்க்கிறோம். ஏரிகளை பார்க்கிறோம். இப்படி வாஸ்து வகையில் அனைத்தையும் நம் கவனித்து ஒரு இடத்தை வாங்குகிறோம். அதே சமயம் பெரிய EB டவர் லைன் இருக்கக்கூடிய இடத்தில் எவ்வளவு தூரத்தில் நாம் வீடு இருக்க வேண்டும், ஏற்கனவே வீடு இருந்தால் என்ன செய்வது போன்ற சந்தேகங்கள் நிறைய மக்களுக்கு இருக்கும். 100% எலக்ட்ரிசிட்டி ஹை வோல்டேஜ் லைன் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நமது வீடு இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. குறைந்தபட்சம் ஒரு 100 அடிகள் ஆவது தள்ளி இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அதனுடைய எலக்ட்ரிக் மேக்னடிக் போர்ஸ் நம்மை பாதிக்கும். ஏற்கனவே இருந்தால் என்ன செய்வது என்று சொன்னால் காலி செய்வதுதான் முதன்மையான வழி. இல்லை எனக்கு மாற்று வழி தாருங்கள் என்று சொன்னால் ஒரு சில இடங்களில் அதன் பாதிப்பில்லாத அமைப்பில் நமது வீட்டு அமைப்பை கொண்டு வந்து விட வேண்டும். குறிப்பாக இரண்டு மாடிகள் இருப்பது என்று சொன்னால் தரைத்தளம் வந்து விட வேண்டும் . மேல்மாடிக்கு செல்லக்கூடாது. அதுபோல ஒரு தளம் தான் இருக்கிறது என்று சொன்னால் ஒரு சில மாற்றங்களை செய்து அதன் பாதிப்பு நமக்கு இல்லாதவாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது குறிப்பாக கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் இந்த பாதிப்பு நிறைய இடங்களில் இருக்கிறது எனது வாஸ்து பயணத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுபோல திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதிகளில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். இதுபோன்ற நிறைய இடங்களுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். சென்று இருக்கிறேன் ஆனால் நல்லபடியான ஒரு தீர்வை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன் என்பது எனக்கு என்னுடைய வாஸ்து பயணத்தில் சந்தோஷமே.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!