சிவராத்திரி 2025

2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி –

சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விரதமாகும். இது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மாசி மாதம் 14 ந் தேதி புதன்கிழமை சரியான ஆங்கில தேதி 26.2.2025 அன்று வருகிறது. இந்த சிவராத்திரி அன்று பக்தர்கள் விரதம் இருந்து, இரவில் கண் விழித்து சிவபெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.


சிவராத்திரி விரதத்தின் முக்கியத்துவம்:

  • சிவராத்திரி விரதம் பாவங்களை போக்கும்.
  • சிவபெருமானின் அருளைப் பெறலாம்.
  • சிவராத்திரி விரதம் குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
  • சிவராத்திரி விரதம் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும்.
    சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகள்:
  • சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சிவபெருமானை வழிபட வேண்டும்.
  • நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.
  • இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • சிவராத்திரி அன்று சிவபெருமானின் நாமங்களை ஜெபிக்க வேண்டும்.
  • சிவராத்திரி அன்று சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
    சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபட்டால், நாம் வேண்டிய வரங்களை பெறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!