வாஸ்து நாட்காட்டி 6.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

6.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 6.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
23ந் தேதி திங்கள்கிழமை . காலை 6.42 வரை வ.சஷ்டி திதி.  பிறகு வ. சப்தமி திதி.  இரவு 2.11 வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம்:7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

நாள் முழுவதும் யோகநாள் குறைவு .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து சார்ந்த பயணத்தில் எனது வீடு என்பது, என்னுடைய வாழ்க்கையில் தற்போது வசிப்பது ஏழாவது வீடு.ஆனாலும் மேலும் கடைசி நிகழ்வு வகையில் ஒரு புதிய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. ஆக ஏழு வீடுகள் மாறி மாறி வந்தவன் என்ற முறையில் ஒரு சில வாஸ்து விஷயங்களை அசை போட்டுப் பார்க்க வேண்டும். அந்த வகையில் வாஸ்து சார்ந்த அறிவு பயணத்திலும் பலவிதமான முறைகள் இருந்தாலும், எந்த முறை மிகச் சரியான முறை என்று பார்க்கும் பொழுது என்னை பொறுத்த அளவில் முழுக்க முழுக்க பழந்தமிழர் உபயோகித்த முறையை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால், அதில் தேவையான விஷயங்களை எடுத்துக்கொண்டு, நவீன காலத்திற்கும் பொருந்துகின்ற விஷயத்தை மட்டுமே தொட்டு பார்க்க வேண்டும். பொருந்தாத விஷயத்தை கொஞ்சம் விட்டுவிட வேண்டும் என்று சொல்வேன். அந்த வகையில் புதன் வாசல் என்பதும், வடகிழக்கு, தென்மேற்கு பூஜையறை என்பதும் 100% தவிர்க்க வேண்டும். இதனை யாராவது நீங்கள் சொல்வது குற்றம். இதனை அனுபவித்துவிட்டு சொல்ல வேண்டும் என்று யாராவது சொன்னால் அவர்கள் என்னைப் போல ஏழு வீடுகளில் வாழ்ந்தது கிடையாது என்றுதான் சொல்லுவேன். ஏழு வீடுகளில் எடுத்த அனுபவத்தில் சாரமே எனது வாஸ்து வாழ்க்கை.ஆக இதனைத்தான் வாஸ்து பயணமாக மக்களுக்கு அளித்து வருகிறேன். அந்த வகையில் உச்ச வாசல் என்பது மிக மிக முக்கியம். பூஜை அறை என்பது வடகிழக்கு தென்மேற்கில் வேண்டாம். அப்படி யாராவது வைத்து கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு வாஸ்து முழுவதுமாக ஞானம் கிடையாது என்றுதான் சொல்லுவேன். இது சார்ந்த ஒரு சில பதிவுகளை எனது யூடியூப் சேனல் மற்றும், எனது பேஸ்புக் மற்றும், சோசியல் மீடியாக்கள் வகையிலும் பகிர்ந்து கொள்வது, நிறைய எதிர் கருத்துக்கள், கண்டனங்கள் எனக்கு வருகின்றன.  அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. மக்களுக்கு உண்மையான விஷயத்தை கொண்டு சேர்க்கவேண்டும். உண்மையான விஷயத்தை சொல்லவேண்டும் என்கிற ஒரு விஷயம் மட்டுமே எனது நோக்கமாக இருக்கிறது. ஆகவே எனது பதிவுகளில் குற்றம் கண்டுபிடித்தால் புதன் வாசல் சார்ந்த, பூஜையறை சார்ந்த பழந்தமிழர் முறையை இன்று குற்றம் சொல்லுகிறீர்கள் என்று சொன்னால் சொல்கிற மனிதர்தான் குற்றவாளி என்று சொல்லுவேன். தயவுசெய்து இதுபோன்ற கருத்துக்களை என்னிடம் நேரிடையாக கேட்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆக ஒரு வீடு கட்ட வேண்டும்  என்று ஒருவர்  முடிவு செய்தால்,   தயவுசெய்து சதுரம் செவ்வகம் ஆகவும், உச்சவாசல் சார்ந்து அமைத்துக் கொள்ளுங்கள். வீடு சார்ந்த விஷயத்தில் நவகிரகங்களுக்கு வேலை கிடையாது. நவகிரகத்தை உட்புகுத்தி ஒருவர் வாஸ்து சொல்கிறார் என்று சொன்னால் அது அவருடைய தவறு கிடையாது.  அதனை சொல்கிற மனிதர்களிடம் போவது யாரோ அவர்களுடைய குற்றம் என்று தான் சொல்லுவேன்.

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- வரவு
ரிசபம்- எதிர்ப்பு
மிதுனம்- சினம்
கடகம்-  களிப்பு
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- லாபம்
துலாம் – துன்பம்
விருச்சிகம்- அமைதி
தனசு – உயர்வு
மகரம்- சிரமம்
கும்பம்- சாந்தம்
மீனம் –   சாதனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_06

சுவீடன் தேசிய தினம்

இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

ஒய்.எம்.சி.ஏ., லண்டனில் அமைக்கப்பட்டது(1844)

குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading