வாஸ்து காலண்டர் 28.6.2022 | எட்டுதிசையில் வாஸ்து தெற்கு திசை

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

28.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.48.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 28.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
14ந் தேதி ஆதிவாரம். நாள் முழுவதும் அமாவாசை திதி. மாலை 6.50 வரை மிருஹஷிரிசம்நட்சத்திரம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று மாலை 6.50வரை நல்ல யோகநாள் பிறகு யோகம் குறைவு  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

எட்டு திசை வாஸ்து குற்றங்கள் வரிசையில் தெற்கு சார்ந்த, எமன் திசை என்று சொல்லக்கூடிய திசையில் இருக்கும், நல்லது மற்றும் கெட்டது சார்ந்த விஷயங்கள் வாஸ்து வகையில் எந்த மாதிரி பாதிப்பை கொடுக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். எமன் திசை அனைத்து திசைகளை விட உயரத்தில் இருக்கவேண்டும். இதற்கு இணையாக தென் மேற்கு திசையும், தென் கிழக்கு திசையும் இணையாக இருந்தால் நன்மையை தரும். அதே சமயம் தென்கிழக்கு திசை இறங்கி இருந்தாலும், தென்மேற்கு திசை உயரமாக இருந்தாலும் நல்ல பலன்களை கொடுக்கும். இப்படி இல்லாது தென்மேற்கு திசை இறங்கி இருந்தாலும், தென்கிழக்கு திசை உயரத்தில் இருந்தாலும் தவறான பலன்களை கொடுக்கும். எந்த இடத்திலும் தெற்கு என்பது உயரத்தில் இருக்க வேண்டும். அதே சமயம் ஒரு இடத்திற்கு வெளிப்புறப் பகுதியில் தெற்கு திசைகள் பள்ளமாக மாறக்கூடாது. அப்படி மாறினால் தெற்கு திசை நீச்சம் அடைந்ததாக கருதவேண்டும். தெற்கு திசையில் குற்றங்கள் ஏற்படும் பொழுது அதாவது வடக்கு விட பள்ளமாக இருக்கும் பொழுதும், தென்மேற்கு விட உயரமாக இருக்கும் பொழுதும், தென்கிழக்கு விட பள்ளமாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் பணம் சார்ந்த நெருக்கடி, பொருளாதாரத்தில் பிரச்சனைகள், நோய்களின் தாக்கம் இருக்கும்.

இந்த நிலை ஒரு இடத்தில் இருக்கிறது என்று சொன்னாலே உடனடியாக போர்க்கால அடிப்படையில் தெற்கு திசையை கவனித்து சரி செய்யும் போது அந்த இடத்தில் சரி செய்த நாள் முதற்கொண்டு, பொருளாதார பெறுக்கம் வியாதிகள் சார்ந்த நிலையில் மாறுதல், உடல் ஆரோக்கியம் , அந்த இல்லத்தில் இரண்டாவது குழந்தை சார்ந்த, அந்த இல்லத்தின் மூன்றாவது சார்ந்த நிகழ்வுகளில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக பெண்கள் நிலையில் தெற்கு சரியாக இருக்கும் பொழுது, பெண்கள் அந்த வீட்டில்  நல்ல உயர்தர பெண்மணிளாக அனைவரையும் அரவணைப்பு என்ற நிலை, அனைவரும் மதிக்கின்ற பெண்மணிகளாக இருப்பார்கள். தெற்கு மிகச்சரியாக இருக்கும் போது சொத்து, செல்வநிலை, தங்கம் நகை , போன்ற விஷயங்களில் நல்ல பலன்களைக் கொடுக்கும். பெண்களின் நிலையில் தெற்கு திசை குற்றம் ஏற்படும் போது , பெண்கள் உடல் நிலையில் பின்புற பகுதிகளாக இருக்கக்கூடிய இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் பிரச்சனையை கொடுக்கின்ற நிகழ்வாக இருக்கும் . தெற்கு திசை என்பது வாஸ்து விதிகளுக்கு இல்லாது போகக்கூடாது. ஆக தெற்கு வாஸ்து குற்றங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொள்வது நலம்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-  அலைச்சல்
ரிசபம்- நிம்மதி
மிதுனம்- பாராட்டு
கடகம்- அமைதி
சிம்மம்- நன்மை
கன்னி- லாபம்
துலாம் – செலவு
விருச்சிகம்- வெற்றி
தனசு – அமைதி
மகரம்- பரிவு
கும்பம்- பணிவு
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_28

ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)

மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)

கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)

இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading