நாளைய பஞ்சாங்கம் 23.8.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

23.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 23.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
7ந் தேதி செவ்வாய்க்கிழமை  காலை 6.08 வரை தே. ஏகாதசி திதி . பிறகு த்வாதசி திதி  காலை 10.29 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று காலை 10.29 வரை யோகம் குறைவு பிறகு நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

அந்தந்த மனைக்கு ஏற்ப சரியாகக் கணித்து அதன்படி வீட்டையோ அல்லது நிறுவன கட்டிடங்களை கட்டினால் செல்வம் சுகம் ஆகியன விருத்தியடையும்.இதன் பொருள் என்னவென்றால் செல்வம்,சுகம்,விருத்தியடையும் வகை உள்ளவர்கள் கட்டிடும் எந்த கட்டிடமும் வாஸ்து சாத்திரப்படி அமைவது உண்மை.சாத்திரத்திற்குப் புறம்பாக அமையும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாவது நிச்சயம்.அதில் ஓர் அறிவுபூர்வ விளக்கம் அடங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.இது மூடநம்பிக்கை என வாதிடுவோர் உண்டு.இதிலுள்ள முக்கிய விஷயம் என்னவெனில் அதைத் தவறாகக் கணிப்பவர்களே அதிகம்.மேலும் பல வாஸ்து நிபுணர்கள் ஏதாவது ஓர் குறையை உள்வைத்து  கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை, முறையாகக் வாஸ்து சொல்லும் மனிதர்கள் அறிவர்.அதே வேளையில் தவறாகக் கணிப்பவர்கள் பலர் உண்டு.பல தெய்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த சாத்திரங்களைக் கற்பிப்பவர்களும் உண்டு.மிகவும் அரிதாக அறிவுபூர்வமாகக் கணிப்பவர்ளும் உண்டு. ஆனால் இந்த இடத்தில் வாஸ்துவில் கடவுள் என்கிற விஷயம் 100% கிடையாது. வாஸ்து பூஜை, பூமி பூஜை போன்ற விஷயங்களில் வேண்டுமானால், கிரகப்பிரவேச நிகழ்வு போன்ற விஷயங்களில் வேண்டுமானால் கடவுளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் சாஸ்திரங்களில் கடவுளை உள்ளே நிறுத்துவது என்பது தவறு. ஆக கடவுளை முன்னிறுத்தி வாஸ்து சொல்லுகிற மனிதர்களும் தவறானவர்கள் என்று தான் சொல்லுவேன்.

அதேசமயம் வடக்கிலும் கிழக்கிலும் காலி இடம் வேண்டும் என்பதற்காக கட்டிடங்களில்  திறப்புக்களை வைத்துவிட்டு கட்டிடம் நிற்கும் நிலைக்காக தூண்களை கிழக்கிலும், வடக்கிலும் நிறுத்தி வைப்பது வாஸ்து வகையில் மேற்கும், தெற்கும் சுற்றுச்சுவருக்கு வீட்டிற்கும் இடையே இருக்கும் இடைவெளி கூட, மேற்கு தெற்கு காலி இடங்களாக பேசும். இதுபோல வாஸ்து நிபுணர்கள் வரைபடம் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுக்கும் வாஸ்து தெரியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில வாஸ்து நிபுணர்கள் சொல்வார்கள். மேல் தளத்திற்கு வாஸ்து கிடையாது. தரைத் தளத்துக்கு தான் என்று சொல்வார்கள்.  அப்படிச் சொல்கிற  வாஸ்து வல்லுநர்களுக்கும் வாஸ்து தெரியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸ்து சார்ந்த விஷயத்தில் நல்ல மனிதர்களை தேர்வு செய்து வாஸ்துவை சரி பார்த்துக் கொள்வது நல்லது .
மேலும் இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயம் தயவுசெய்து வாஸ்து நிபுணர்களிடம் அது நானாக இருந்தாலும் கூட, வாஸ்து நிபுணர்கள் இடம் முதலில் வரைபடம் வாங்க வேண்டாம். நீங்கள் ஒரு ஆர்கிடெக்ட் அல்லது, இன்ஜினியர் சார்ந்த மேஸ்திரி சார்ந்த மனிதர்களிடம் வரை படத்தை வாங்கி அதற்கு பிறகு வாஸ்து சீர்திருத்தம் என்பது வாஸ்து நிபுணரை பார்த்து சரி பார்த்து செய்யுங்கள். அது தான் சரியான முடிவாக இருக்கும். ஏனென்று சொன்னால் உங்களுக்கு தேவையான விஷயங்களை அந்தத் துறை சார்ந்த பொறியாளர்களும், நிபுணர்களும் சரியாக வழங்குவார்கள். வாஸ்து விதிகளுக்கு சரியாக இருக்கிறதா என்பதை வாஸ்து நிபுணர் பார்த்து சரிசெய்து கொடுப்பார்கள்.


—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -தேர்ச்சி
ரிசபம்- பயம்
மிதுனம்- ஆர்வம்
கடகம்- ஆக்கம்
சிம்மம்- பாசம்
கன்னி- வாழ்வு
துலாம் – நன்மை
விருச்சிகம்-வெற்றி
தனசு – பாராட்டு
மகரம்-பெருமை
கும்பம்-எதிர்ப்பு
மீனம் – அசதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

Padappai vastu consultant,
படப்பை வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
கொளப்பாக்கம் வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
Kolapakkam vastu consultant Chennai,
கோலபாக்கம் வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
மாங்காடு வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
Mankadu vastu consultant ,

________________________

#வரலாற்றில்_இன்று
# August_23

ருமேனியா விடுதலை தினம்(1944)

உக்ரேன் கொடி நாள்

மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)

உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading