சென்னை வாஸ்து தமிழ் காலண்டர் 16.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

16.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 16.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
31ந் தேதி சனிக்கிழமை மதியம் 1.29 வரை திருதியை திதி. பிறகு தே.சதுர்த்தி திதி.மதியம் 2.59  வரை அவிட்டம் பிறகு சதயம்  நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

புதிதாக வீடு கட்ட நினைக்கிற மக்கள் சகுன நிமித்தங்களை கொஞ்சம் கவனித்துக் கொள்வது நலம். ஏன் என்று சொன்னால் சகுன நிமித்தங்கள் நன்றாக இருக்கின்ற பொழுது, வீடு நல்ல முறையில் வேலை முடிந்து எளிதாக குடிபுக கூடிய ஒரு சூழ்நிலைக்கு நமக்கு ஒரு சகுனமித்தமாக சொல்லுகிற செயலாக பார்க்கப்படுகிறது . அந்த வகையில் வீடு கட்டுகிற மக்கள் மற்றும், கொத்தனார், மேஸ்திரி, இன்ஜினியர் மற்றும்,உறவினர்கள் சேர்த்து வீடு கட்டுகிற இடத்திற்கு மனை கோல போகும் பொழுது, எதிரில் வருகிற நிகழ்வுகள் நிமித்தங்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நிறைகுடம் எடுத்து வருதல், சலவை தொழிலாளி எதிரில் வருதல், தயிர், பால், அன்னம், மது வாகனம் ஏற்றிய வண்டி, அரசர் அல்லது அரசியல்வாதி, கரும்பு லோடு வருதல், இரண்டு பிராமணர்கள் வருதல், கிளி பறந்து வருதல் இவைகளை நல்ல சகுனங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் கருடன், மூஞ்சறு, கீரிப்பிள்ளை, எலி, மான் கூட்டங்கள், வலியன், ஆந்தை, நாய் கூட்டங்கள், இவைகள் இடமாக சென்றால் நன்று.

எதிர்மறை பலன்களாக என்று பார்க்கும் போது, தலையை விரித்துப் போட்டு வரும் நபர்கள் மற்றும் பெண்கள், முடி இயற்கைக்கு எதிராக இருக்கிற மனிதர்கள், உடல் குறை மனிதர்களை பார்ப்பது, கையில் தடிக் கம்போடு வருகிற மனிதர்கள் , விறகு கொண்டு வருதல், ஒரு பிராமணர் எதிரில் வருவது,எண்ணை குடத்தை எடுத்து வருதல், அல்லது எண்ணை வாகனம் வருதல், முடி வெட்டும் தெரிந்த நபர் எதிரில் வருதல், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்எதிரில் வருதல், இவைகள் எதிர்மறை நிமிர்த்தங்களாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு அந்த நிகழ்வை ஒத்திவைத்து, ஒரு ஆலயத்திற்கு சென்ற பிறகு மீண்டும் தொடங்க வேண்டும் என்பது நல்ல நிகழ்வாக பார்க்க படுகிறது.  ஆக இந்த விஷயங்களை கவனித்து பூமி பூஜை போடுவதும் மனை கோல செல்வதும் நன்று.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- பயம்
ரிசபம்- பரிவு
மிதுனம்- ஓய்வு
கடகம்-   சினம்
சிம்மம்- லாபம்
கன்னி- வரவு
துலாம் – பரிசு
விருச்சிகம்- வெற்றி
தனசு – உதவி
மகரம்- நன்மை
கும்பம்- நிறைவு
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_16

சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)

ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)

எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)

பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)

டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.(1955)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading