ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
21.6.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 21.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
7ந் தேதி மங்களவாரம். இரவு 8.32 வரை தே. அஸ்டமி திதி. பிறகு தே.நவமி திதி. நாளை விடியற்காலை காலை 4.49 வரை உத்திரட்டாதி நட்சத்திரம் பிறகு ரேவதி நட்சத்திரம்.
ராகுநேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:
வாஸ்து ரீதியாக ஒருசில தொழிற்சாலைகளின் கதவு என்பது அதாவது சுற்றுச் சுவரில் உள்ள காம்பவுண்ட் கேட் என்று சொல்லக்கூடிய அமைப்பு என்பது தவறாக இருக்கும். ஒரு இடத்தில் கதவுகள் வைக்கும்பொழுது பெரிய அளவில் இருக்கும் வாகனங்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக காம்பவுண்ட் கேட் என்பது கட்டிடத்திற்கு உள்ளே தள்ளி அமைத்திருப்பார்கள். அப்பொழுது அந்த கதவு இருக்கும் இடம் மொத்த இடத்திற்கு உள்பகுதியில் வராது, இடம் வெளியே தள்ளி மாறி விடும். அந்த குறிப்பிட்ட இடத்தின் இடம் என்பது இல்லாமல் போய்விடும். இது மிகப் பெரிய தவறுகளை ஒரு நிறுவனத்தில் கொடுக்கும் .அந்த வகையில் வடகிழக்கு வடக்கு காம்பவுண்ட் கேட்டும், கிழக்கு காம்பவுண்ட் கேட்டும் நான் சொல்லுகிற அமைப்பில் இருந்தால் மிகப்பெரிய குற்றம். அதே சமயம் தென்கிழக்கு தெற்கு கதவுகளும், வடமேற்கு மேற்கு கதவுகளும் இருந்தாலும் கூட பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. ஆக ஒரு நிறுவனத்தில் சிறிய விஷயமாக இருக்கக்கூடிய காம்பவுண்ட் கேட் என்பது வாஸ்து விதிகள் பொறுந்தி வேண்டும். இல்லை என்றால் சரியான முறையில் அமைத்துக் கொள்வது நலம். அப்படி ஒரு இடத்தில் வடக்கு இல்லாமல் போகும் பொழுது, அந்த இடத்தின் பொருளாதார நிலை மேம்பாட்டு விஷயமாக இருக்காது.
அதே சமயம் கிழக்குபகுதி இல்லாமல் போகும் பொழுது அந்த தொழிற்சாலையின் செயல்திறன் என்பது பெரிய அளவில் இருக்காது. இந்த விதி மேற்கு வடமேற்குப் பகுதியில் இருக்கும், தென்கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கதவுக்கும் மேற்கூறிய விதிகளும் பொறுந்தி வரும். ஆக ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கவில்லை, ஒரு நிறுவனம் பெரிய அளவில் செயல்திறன் இல்லை என்று சொன்னால், கதவுகளையும் கவனித்து மாற்றம் செய்யும்போது நல்ல விஷயத்தை அந்த நிறுவனங்கள் கொடுக்கும். என்னை பொறுத்த அளவில் 1995 காலகட்டங்களில் இருந்து 2005 காலகட்டங்களில் கட்டிய நிறுவனங்களில் இந்த தவறுகளை செய்திருக்கிறார்கள். தற்காலத்தில் ஒரு சில இடங்களிலும் இந்த தவறை செய்திருக்கிறார்கள். தயவு செய்து இந்த தவறுகளை தொழிற்சாலை சார்ந்த நிறுவனங்களில் செய்ய வேண்டாம்.
______________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேஷம்- வெற்றி
ரிசபம்- சாந்தம்
மிதுனம்- முயற்சி
கடகம்- அமைதி
சிம்மம்- இரக்கம்
கன்னி- நலம்
துலாம் – உயர்வு
விருச்சிகம்- இன்பம்
தனசு – நன்மை
மகரம்- புகழ்
கும்பம்- அசதி
மீனம் – தொல்லை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#june_21
சர்வதேச யோகா தினம்
சர்வதேச இசை தினம்
சர்வதேச மனிதநேய தினம்
க்ரீன்லாந்து தேசிய தினம்
ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)
க்ரீன்லாந்து தன்னாட்சி பெற்றது (2009)
_________________
மேலும் விபரங்களுக்கு
#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
360 total views, 1 views today